அண்மைய செய்திகள்

recent
-

யாழ். ஊடகவியலாளர் கைது முயற்சிக்கு கண்டனம்

யாழ் ஊடகவியலாளர்கள் சிலர் மீது போய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை கைது செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த ஊடகவியலாளர்கள்மீது பொலிஸாரும் இராணுவத்தினரும் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை கைது செய்ய முயற்சித்ததாக முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 சோதனை என்ற போர்வையில் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்திற்குள் இராணுவ சிப்பாய் ஒருவர் பெட்டியொன்றை வைத்ததை அதிலிருந்த ஊடகவியலாளர்கள் மூவர் அவதானித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டபோது குறித்த பெட்டியில் போதைப் பொருள் உள்ளதாக தெரிவித்து வாகனத்தில் இருந்த ஊடகவியலாளர்களையும் சாரதியையும் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கைது செய்து அழைத்துச் சென்றிருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது பல்வேறு தரப்பபினரும் விடுத்த அழுத்தம் காரணமாகவே ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் முன்னணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இராணுவ மற்றும் பொலிஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தமிழ் ஊடகவியலாளர்களை கைது செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது
யாழ். ஊடகவியலாளர் கைது முயற்சிக்கு கண்டனம் Reviewed by NEWMANNAR on July 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.