அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலை உள்ளிட்ட சில பகுதிகளில் வித்தியாசமான வெளிச்சம் மற்றும் ஒலி உணரப்பட்டுள்ளன

திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்றிரவு வித்தியாசமான வெளிச்சம் மற்றும் ஒலி என்பன உணரப்பட்டுள்ளன. இந்த அசாதாரண நிகழ்வு நேற்றிரவு 8 மணி தொடக்கம் 9 மணிவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். 

 அனுராதபுரத்தின் சில பகுதிகளில் வித்தியாசமான வெளிச்சமொன்று வானில் தென்பட்டுள்ளது. பொலன்னறுவை, ஹிங்குரக்கொட பகுதியிலும் பிரதேச மக்கள் வித்தியாசமான ஒலியை கேட்டுள்ளனர். குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளிலுள்ள மக்கள் இந்த ஒலி மற்றும் வெளிச்சத்தினை பார்வையிட்டு, கேட்டும் உள்ளமை பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை உள்ளிட்ட சில பகுதிகளில் வித்தியாசமான வெளிச்சம் மற்றும் ஒலி உணரப்பட்டுள்ளன Reviewed by NEWMANNAR on August 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.