அண்மைய செய்திகள்

recent
-

சிறுநீரக மாற்று சிகிச்சைகள் எட்டு மாதங்களாக தடை


தேசிய சிறுநீரக சத்திரசிகிச்சை நிலையத்தில், சிறுநீரக மாற்று சிகிச்சைகள் எட்டு மாதங்களாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலைமையின் கீழ், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக பட்டியிலிட்பட்டுள்ள நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த சிறுநீரக நோயாளர்களில் அதிக அவதானமுடைய நோயாளர்களும் அடங்குகின்றனர்.

சிறுநீரக மாற்று சிகிச்சை நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை எனவும் நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து தேசிய சிறுநீரக மாற்று சிகிச்சை நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் சுமித் ஆனந்தவிடம் நியூஸ்பெஸ்ட வினவிய போது தமது நிலையத்தின் தீவிர கண்காணிப்பு பிரிவில் முன்னெடுக்கப்பட வேண்டிய திருத்த வேலைகள் காரணமாகவே சிகிச்சைகள் தடைப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார்.
சிறுநீரக மாற்று சிகிச்சைகள் எட்டு மாதங்களாக தடை Reviewed by NEWMANNAR on March 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.