அண்மைய செய்திகள்

recent
-

இனப்படுகொலையே இங்கு நடந்தது


இலங்­கையில் தமிழ் மக்கள் மீது நடத்­தப்­பட்­டது இனப்­ப­டு­கொ­லை­யே­யாகும் என்று யாழ்.சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவிச் செய­லாளர் ஜெப்ரி பெல்ட்­ட­னிடம் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இலங்கை அர­சுக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் சுமு­க­மான உறவு நில­வ ­வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பாகும் என்றும் வலியுறுத்திய அவர்,வடமாகாண சபையில் நிறை­ வேற்­றப்­பட்ட இன அழிப்பு தொடர்­பான பிரே­ர­ணை­யுடன் ஆவ­ணங்­க­ளையும் ஐ.நா.உதவிச் செயலாளரிடம் கைய­ளித்துள்ளார்.

இலங்­கைக்­கான விஜயத்தை மேற் ­கொண்டு யாழ்ப்­பாணம் வருகை தந்த ஐக்­கிய நாடு­களின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவிச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று வட­மா­காண சபை முதலமைச்சர் மற்றும் அமைச்­சர்­களை உள்­ளூ­ராட்சி அமைச்சின் அலுவ­ல­கத்தில் சந்­தித்துக் கலந்­துரை­யா­டினார். இந்தச் சந்திப்புக் குறித்து ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் மேலும் தெரி­விக்­கையில்,

வட­ப­குதி மக்­களின் நிலை­மை­களை அறிந்துகொள்­வ­தற்­காக வருகை தந்த ஐக்­கிய நாடுகள் சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவிச் செய­லாளர் ஜெப்ரி பெல்ட்மன்
பல­ரையும் சந்­தித்­துள்ளார். இதன் தொடர்ச்­சி­யாக வட­மா­காண முத­ல­மைச்­ச­ரான என்­னையும் அமைச்­சர்­க­ளையும் சந்­தித்தார்.

இதன்­போது வட­ப­குதி மக்­களின் தற்­போ­தைய நில­மைகள், அர­சியல் நில­மைகள் குறித்து பேச­ப­பட்­டது. குறிப்­பாக அர­சியல் நில­மைகள் தொடர்­பா­கவே எம்­மிடம் கேள்­விகள் கேட்­கப்­பட்­டன. விசே­ட­மாக வட­மா­காண சபையில் நிறை­வேற்­றப்­பட்ட இன அழிப்பு தொடர்­பான பிரே­ரணை தற்­போது நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­மைக்­கான காரணம் என்ன எனக் கேட்­கப்­பட்­டது.

இதற்கு பதி­ல­ளித்த நான் இது எமது மக்­க­ளு­டைய மனோ­நி­லையை வெ ளிப்­ப­டுத்தும் ஒரு ஆவணம் என்று கூறினேன். எங்­க­ளுக்கு சார்­பாக இருக்கும் அர­சாங்கம் இரா­ணுவ முகாம்­களை அகற்­ற­மாட்டோம் என்று கூறும் போது எங்­க­ளு­டைய உண்­மை­யான நிலை என்ன கடந்த காலம் முதல் தற்­போது வரை நடை­பெற்ற நில­மைகள் சரித்­தி­ர­ரீ­தி­யாக நடை­பெற்­றமை தொடர்­பாக உல­கிற்கு எடுத்துக் காட்­டு­வ­தற்­காக இத்­த­கைய பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்­களின் மனங்­களில் ஆழ­மாக பதிந்­துள்ள பிரச்­சி­னை­களை வெ ளிக்­காட்ட வேண்­டிய சூழல் இருந்­த­மையால் இதனை வெ ளிப்­ப­டுத்­தினோம்.மேலும் எதிர்­கா­லத்தில் தமிழ் சிங்­கள மக்­க­ளி­டையே சுமு­க­மான உற­வு­களை வலுப்­ப­டுத்த வேண்டும் என்றால் தமிழ் மக்­க­ளுக்கு இது­வரை காலமும் நடை­பெற்ற அவ­லங்கள், இன்­னல்கள் தொடர்­பாக சிங்­கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்­ப­டையில் இதனை நிறை­வேற்­றினோம்.

இதனை இன­ரீ­தி­யாக எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது. எமது மக்­களின் மனோ­நிலை இது. உண்­மை­களை வெ ளிக்­கொண்­டு­வ­ரு­வதன் மூலமே எதி­ர­கா­லத்தில் இரு சமூ­கங்கள் இரு இனங்­க­ளி­டையே சுமு­க­மான உறவை மேம்­ப­டுத்­தலாம் எனக் கூறினேன்.

மேலும் எதிர்­கா­லத்தில் எத்­த­கைய உறவை வைத்­தி­ருக்­கப்­போ­வ­தாக எம்­மிடம் கேட்­டார்கள். இதற்கு பதி­ல­ளித்த நான் தற்­போ­தைய அரசு எங்­களால் கொண்­டு­வ­ரப்­பட்­டது நாங்­களும் சேர்ந்து வாக்­க­ளித்த அர­சாங்கம். ஆகவே இந்த அர­சுக்கும் எங்­க­ளுக்கும் சுமூக உறவு நில­வ­வேண்டும் என்­பதே எங்­க­ளு­டைய எதிர்­பார்ப்­பாகும் என தெரி­வித்தேன்.

மேலும் ஐ.நா அறிக்கை பிற்­போ­டப்­பட்­டது ஒரு தடவை மட்டும் தான் என்றும் செப்­டெம்பர் மாதம் அதே அறிக்கை வெளி­வரும் எனவும் ஐ.நா. பிர­தி­நிதி தெரி­வித்தார். புதிய அர­சுக்கு சற்று கால­தா­மதம் வேண்டும் என்ற எண்ணம் ஐ.நாவின் நாடு­க­ளுக்கு இருந்­தது. அதனால் இது பிற்­போ­டப்­பட்­டது. முன்­னைய ஜனா­தி­பதி போல் அல்­லாது மக்களிடையே சுமூகமான நல்லுறவை ஏற்படுத்தும் எண்ணத்துடன் இருக்கும் புதிய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சற்று காலதாமதம் கொடுப்பதில் தவறு இல்லையேன ஐ.நா பிரதிநிதி குறிப்பிட்டதாக முதலமைச்சர் கூறினார்.

இதேவேளை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு பிரேரணை மற்றும் முக்ககிய ஆவணங்களை ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளருக்கு கையளித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இனப்படுகொலையே இங்கு நடந்தது Reviewed by NEWMANNAR on March 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.