மன்/பெரிய பண்டிவிரிச்சான் ம.வி பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு.-Photos
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் ம.வி பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வு கூடம் இன்று(22) திங்கட்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பெரிய பண்டிவிரிச்சான் ம.வி பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி எஸ்.அழகேஸ்வரி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் குறித்த ஆய்வு கூடத்தை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன் போது மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்/பெரிய பண்டிவிரிச்சான் ம.வி பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 22, 2015
Rating:
No comments:
Post a Comment