அண்மைய செய்திகள்

recent
-

ஐ.எஸ். தீவிரவாதிகளை மிரட்டும் எய்ட்ஸ்...


ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை எய்ட்ஸ் நோய் மிரட்டி வருகின்றது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் தொடர்ந்தும் போராடி வருகின்றது.

இந்தநிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இடையே எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகின்றது.

இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் எய்ட்ஸ் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று தலைமை உத்தரவிட்டு உள்ளது.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்த ஐ.எஸ். தீவிரவாத தலைமை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் 16க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகை மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இயற்கையின் கொடையாக இந்த மரண பீதி ஏற்பட்டுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளை மிரட்டும் எய்ட்ஸ்... Reviewed by Author on August 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.