அண்மைய செய்திகள்

recent
-

முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு...


2015ஆம் ஆண்­டுக்­கான முரளி ஹார்­மனி கிண்ணத் தொடர் எதிர்­வரும் 7ஆம் திகதி ஆரம்­பிக்­கி­றது.


2012ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தத் தொடர், தொடர்ந்து 4ஆ­வது முறை­யாக நடை­பெறும் முரளி ஹார்­மனி கிண்ணத் தொடரில் மொத்தம் 16 ஆண்கள் அணி­களும், 8 பெண்கள் அணி­களும் பங்­கு­பற்­று­கின்­றன.

இந்தப் போட்­டிகள் அனைத்தும் வடக்குப் பகு­தி­யி­லுள்ள மைதா­னங்­களில் நடை­பெ­றுகின்­றமை விசேட அம்­ச­மாகும். யாழ்ப்­பாணம், ஒட்­டுச்­சுட்டான், மாங்­குளம், கிளி­நொச்சி ஆகிய
பிர­தேச மைதா­னங்­களில் நடை­பெ­று­கி­றது.

இந்தத் தொடரில் குழு 'ஏ' இல் யாழ். கல்­லூரி கூட்டு அணி, டி.எஸ்.சேனா­நா­யக்க கல்­லூரி, மலி­ய­தேவ கல்­லூரி, மொனரா­கலை ஆகிய அணி­களும்.

குழு 'பி' இல் யாழ். சென். ஜோன்ஸ், மலை­யக கல்­லூ­ரி­களின் கூட்டு அணி, தெப­ர­வெவ மத்­ திய கல்­லூரி, திரு­கோ­ண­ மலை -– மட்­டக்­க­ளப்பு கூட்டு அணி ஆகிய அணி கள் இடம்­பி­டித்­துள்­ளன.

அதே போல் குழு 'சி' இல் ஆனந்தா கல்­லூரி, கிளி­நொச்சி -முல்­லைத்­தீவு கூட்டு அணி, வத்­தளை சென்.அந்­தனிஸ், சர்வதேச பாட­சலை­க­ளுக்­கி­டை­யி­லான கூட்டு அணியும் இடம்­பி­டித்­துள்­ளன.

குழு 'டி' இல் ரிச் மண்ட் கல்­லூரி, பி.டி.எஸ்.குல­ரத்ன கல்­லூரி, மன்னார் – வவு­னியா கூட்டு அணி மற்றும் தர்­ம­ராஜா கல்­லூரி ஆகிய அணி­களும் இடம்­பி­டித்­துள்­ளன.

இந்தத் தொடர் குறித்து உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பை ஊட­கங்­க­ளுக்கு அறி­விக்கும் நிகழ்வின் போது பேசிய இலங்கை அணியின் சுழற்­பந்து ஜாம்­ப­வானும் இந்தக் கிண்ணத் தொடரின் நாய­க­னு­மான முத்­தையா முர­ளி­தரன், மாண­வர்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் நட்­பையும் ஏற்­ப­டுத்தும் முக­மாக ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தத் தொடர் தற்­போது விஸ்­தீ­ர­ணம­டைந்து இருப்பதாகவும், சிறந்த வீரர்களை கண் டெடுக்கவும் இது உதவும் என்றும் தெரிவித்தார்.

முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு... Reviewed by Author on October 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.