அண்மைய செய்திகள்

recent
-

தமிழக மீனவர்கள் ஐவர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது! படகு பறிமுதல்



இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்களை நேற்று சனிக்கிழமை இரவு தமைன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களை தலைமைன்னார் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர்.

படகு ஒன்றில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளின் பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

இதே வேளை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த இரு தடவைகள் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தமிழக மீனவர்கள் ஐவர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது! படகு பறிமுதல் Reviewed by NEWMANNAR on November 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.