நெய்மர் தான் மிகச்சிறந்த வீரர்: சொல்கிறார் துங்கா...
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோவை விடவும் நெய்மர் மிகச் சிறந்த வீரர் என பிரேசில் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்ட உலகில் மிகச் சிறந்த வீரர்களான வலம்வந்து கொண்டிருக்கின்றனர் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்.
ஆனால் 2015ம் ஆண்டில் இவர்களை விடவும் நெய்மர் சிறந்த வீரர் என பிரேசில் அணியின் பயிற்சியாளரான துங்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கோல்களின் எண்ணிக்கையை பொறுத்த வரை மெஸ்ஸி, ரொனால்டோவை காட்டிலும் நெய்மர் வசம் இன்னும் அதிகமுள்ளது.
பார்சிலோனாவுக்கு வந்த பிறகே நெய்மரின் ஆட்டத்தில் மெருகு கூடியுள்ளது, எதிர்பார்ப்புகளை சரியாக பூர்த்தி செய்து வருகிறார்.
கடந்த 8ம் திகதி வில்லாரியஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த கோல் மிக அபாரமானதாகும் என தெரிவித்துள்ளார்.
நெய்மர் தான் மிகச்சிறந்த வீரர்: சொல்கிறார் துங்கா...
Reviewed by Author
on
November 13, 2015
Rating:
Reviewed by Author
on
November 13, 2015
Rating:


No comments:
Post a Comment