மன்னாரில் எயிட்ஸ் நோய் தொடர்பில் விழிர்ப்புணர்வு ஊர்வலம்.-படங்கள்
சுர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் மன்னாரில் இன்று புதன்(9) கிழமை காலை இடம் பெற்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன் இன்று புதன் கிழமை காலை 8.45 மணியளவில் குறித்த ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து குறித்த ஊர்வலம் மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்தது.
குறித்த ஊர்வலத்தில் மன்னார் மாவட்ட தொற்றா நோய் வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.அன்ரன் சிசில்,மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,மன்னார் பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் கே.சுதாகரன்,நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.வெற்றி நாதன் மற்றும் வைத்திய சாலை பணியாளர்கள்,பொது சுகாதார பரிசோதர்கள்,தன்னார்வத் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டதோடு எயிட் நோயில் இருந்து எவ்வாறு மக்களை பாதுகாப்பது தொடர்பில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் எயிட்ஸ் நோய் தொடர்பில் விழிர்ப்புணர்வு கருத்தரங்கு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் எயிட்ஸ் நோய் தொடர்பில் விழிர்ப்புணர்வு ஊர்வலம்.-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
December 09, 2015
Rating:

No comments:
Post a Comment