அண்மைய செய்திகள்

recent
-

யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட மன்னார் மாவட்டம் சகல விடையங்களிலும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்- வடமாகாண ஆளுனரிடம் மன்னார் ஆயர் இல்லம் கோரிக்கை----படங்கள் இணைப்பு



மன்னார் மாவட்டம் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட மாவட்டம் என்பதினால் மன்னார் மாவட்டம் சகல விடையங்களிலும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என மன்னார் ஆயர் இல்லம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (5) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்றிருந்தார்.
-இதன் போது வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே அவர்களுக்கும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்திற்குரிய ஜோசப் சிங்சிலி சுவாமிப்பிள்ளை அவர்களுக்கும் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
-இதன் போதே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

-குறித்த சந்திப்பில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், ஆயர் அவர்களின் செயலாளர் அருட்தந்தை எ.முரளிதரன் அடிகளார்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்றது.

குறித்த சந்திப்பின்   போது மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து வடமாகாண ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு,மன்னார் மாவட்டத்தற்கு ஆளுனர் அவர்கள்  மாதத்திற்கு ஒரு தடவை வருகை தந்து மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யுமாறு மன்னார் ஆயர் இல்லம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை நல்ல நிலையில் இருந்த போது முன்னெடுக்கப்பட்டு வந்த சகல விடையங்களும்,தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், ஆயர்  அவர்கள் நல்ல நிலையில் இருந்த போது வடமாகாண ஆளுனருக்கு வழங்கப்பட்டு வந்த ஆலோசனைகளும், வழி காட்டல்களும் மன்னார் ஆயர் இல்லத்தினால் தொடர்ந்தும் ஆளுனருக்கு வழங்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டது.

மன்னார் மாவட்டம் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட மாவட்டம் என்பதினால் மன்னார் மாவட்;டமும் சகல விடையங்களிலும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களையும் சந்தித்து ஆசி பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர்-





யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட மன்னார் மாவட்டம் சகல விடையங்களிலும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்- வடமாகாண ஆளுனரிடம் மன்னார் ஆயர் இல்லம் கோரிக்கை----படங்கள் இணைப்பு Reviewed by Author on April 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.