பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு உதவித்திட்டம்- படங்கள் இணைப்பு
வவுனியா பிரதேச செயலகத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு ‘சிறுவர் சிநேக குடும்பம்’ என்னும் தொனிப்பொருளில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 23-12-2016 வவுனியா மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜே.கென்னடி தலைமையில் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மதவு வைத்தகுளம், அண்ணாநகர் மற்றும் அரபாநகர் ஆகிய மூன்று கிராமங்;களிலிருந்து 120 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தந்தை அல்லது தாயாரை அல்லது இரண்டு பேரையும் இழந்த பாடசாலை சிறுவர்களுக்கான உபகரணங்களை சிறுவர் அபிவிருத்தி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.விமலன் வழங்கியிருந்தார்.
பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு உதவித்திட்டம்- படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 23, 2016
Rating:

No comments:
Post a Comment