தீயில் கருகி பள்ளி குழந்தைகள் உட்பட 16 பலி: இத்தாலியில் கோர விபத்து...
இத்தாலியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் தீயில் கருகி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெரோனா பகுதியலே குறித்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஹங்கேரியை சேர்ந்த 16 முதல் 18 வயதுடைய பள்ளி குழந்தைகள் பிரான்ஸிற்கு சுற்றுலா சென்று திரும்பும் வழியிலே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
50 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய தூணின் மீது பயங்கரமாக மோதி தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த கோர விபத்தில் அந்தப் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட 16 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பேருந்தை இயக்கிய பிரஞ்சு ஓட்டுநரும், அவரது குடும்பமும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவயிடத்திற்கு விரைந்த இத்தாலி தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த 39 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தீயில் கருகி பள்ளி குழந்தைகள் உட்பட 16 பலி: இத்தாலியில் கோர விபத்து...
Reviewed by Author
on
January 21, 2017
Rating:

No comments:
Post a Comment