வர்த்தகர்கள் நலன் சார்ந்தே செயற்படுகிறோம்: வவுனியா வர்த்தக சங்கம்...
வர்த்தகர்கள் நலன் சார்ந்தே செயற்படுகிறோம்: வவுனியா வர்த்தக சங்கம்
வர்த்தகர்களின் நலன்சார்ந்தே நாம் செயற்படுகின்றோம் என வவுனியா வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் வவுனியா நகர மத்தியில் தனியார் பேரூந்து சேவையினரும், இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் வவுனியா வர்த்தகர் சங்கம் இ.போ.சவுக்கு சார்பாக செயற்பட்டதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந் நிலையில் இக் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து வர்த்தகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பஸ்தரிப்பு நிலையத்திலும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்கள் அத்துடன் பொதுமக்கள் நலனிலும் உள்ள அக்கறையில் நாம் இ.போ.ச தரிப்பிடத்தில் அனைத்து உள்ளுர் சேவைகளையும் தனியாரும், இ.போ.சபையினரும் இணைந்து நடாத்த வேண்டும் என்பதையே எமது நிலைப்பாடாக வலியுறுத்தியிருந்தோம்.
தனியார் பஸ் உரிமையாளர்களுடனோ, ஊழிர்களுடனோ அல்லது தனியார் பஸ்நிர்வாகத்துடனோ எவ்வித வெறுப்போ அல்லது வேற்றுமையோ எமக்கு கிடையாது.
தனியார் பஸ்களில் எமது அமைப்புக்களில் கடமையாற்றுக்கின்ற ஊழியர்கள் வருகின்றார்கள் போகின்றார்கள். அதனையும் நாம்அறிவோம். எனவே வவுனியா வர்த்தகர் சங்கம் இ.போ.சவுக்கு சார்பாக செயற்பாடுகின்றது என கருதுவது தவறானதென தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
அத்துடன் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் நலன்பெறும் வகையில் இ.போ.சபை, தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்பும் இணைந்து செயற்பட வேண்டும் என தெரிவிப்பதுடன வர்த்தகர் சங்கம் முக்கியமாக வர்த்தகர்களுக்காக செயற்படும் அமைப்பாக காணப்படுகின்றது.
அதனால் வர்த்தகர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் போது அதற்காக செயற்பட வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. எனவே வர்த்தகர் சங்கம் மீது தவறான அபிப்பிராயங்களை கொள்ளவேண்டாம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் நலன் சார்ந்தே செயற்படுகிறோம்: வவுனியா வர்த்தக சங்கம்...
Reviewed by Author
on
January 22, 2017
Rating:

No comments:
Post a Comment