அண்மைய செய்திகள்

recent
-

ஊறணி பகுதியில் விரைவில் காணி விடுவிப்பு....


வலி-வடக்கு ஊறணி பகுதியில் உள்ள பொதுமக்களின் ஒருபகுதி நிலம் இந்த மாத இறுதிக்குள் விடுவி க்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
வலி வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட காணிகள் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில்  மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்றவகையில் தமது நிலங் களை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்மையில் ஊறணி இறங்குதுறைக்கு அருகில் உள்ள கடற்கரைப்பகுதி மற்றும் அதனுடன் கூடிய 2 ஏக்கர் காணி  படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் குறித்த பகுதியில் தாம் தொழில் செய்ய முடியாது என்றும் தமது இறங்குதுறை மற்றும் அதனை அண்டிய நிலங்களை விடுவித்தால் மாத்திரமே தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் குறித்த பகுதிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என இராணுவத்திடம் அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனையடுத்து இம்மாத இறுதிக்குள் ஊறணி இறங்குதுறை மற்றும் அதனையண்டிய நிலம் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.                                   

ஊறணி பகுதியில் விரைவில் காணி விடுவிப்பு.... Reviewed by Author on January 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.