உலகக் கிண்ணப்போட்டியில் கலக்கும் கிளிநொச்சி பாடசாலை மாணவிகள்!
பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண றோல் போல் விளையாட்டில் இலங்கை தேசிய அணியும் விளையாடவுள்ளது.
இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் , சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே உலகக் கிண்ண போட்டியில் பங்குபற்றுகின்றனர்.
Kilinochchi Schoolgirls Are Participated in the World Cup Match
உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 17ம் திகதி முதல் 23ம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ளது.
கடந்த வருட இறுதிப்பகுதியில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த றோல் போல் ஆண், பெண் ஆகிய இரு அணிகளும் மூன்றாம் இடத்தினைப் பெற்றிருந்தன.
பெரியளவிலான வசதிகள் எவையும் இன்றியே இவர்கள் குறித்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் குறித்த அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு கிளிநொச்சியில் பிரத்தியேக உள்ளரங்கம் கூட இல்லாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணப்போட்டியில் கலக்கும் கிளிநொச்சி பாடசாலை மாணவிகள்!
Reviewed by Author
on
February 02, 2017
Rating:

No comments:
Post a Comment