மரணம் கூட எனக்கு ஆதரவாக இருந்தது: லண்டனில் உள்ள மலாலா நெகிழ்ச்சி....
தீவிரவாதிகளால் சுடப்பட்ட போது மரணம் கூட தனக்கு ஆதரவாக இருந்ததாக மலாலா யூசப்சாய் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய், பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.
பின்னர், பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர் பிழைத்த அவர், அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.
இந்நிலையில் பேஸ்புக் தலைமை இயக்குனர் Sheryl Sandberg, மலாலா யூசப்சாயை நேர்காணல் செய்தார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அப்போது மலாலா கூறுகையில், எனது குரலை ஒடுக்க அவர்கள் நினைத்தனர். ஆனால், நான் உயிர்பிழைத்து விட்டேன். அந்த தருணத்திலேயே மரணம் கூட எனக்கு ஆதரவாகவே இருப்பதை நான் உணர்ந்தேன் என்று நெகிழ்ந்திருக்கிறார்.
பெண் கல்விக்கான அவரது பங்களிப்பைக் கௌரவிக்கும்பொருட்டு நோபல் பரிசு உள்ளிட்ட உலகின் பல்வேறு அங்கீகாரங்கள் மலாலாவுக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம் கூட எனக்கு ஆதரவாக இருந்தது: லண்டனில் உள்ள மலாலா நெகிழ்ச்சி....
Reviewed by Author
on
June 26, 2017
Rating:

No comments:
Post a Comment