அண்மைய செய்திகள்

recent
-

நோயா­ளி­களை அச்­சு­றுத்­தும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள்!


தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் அற­வி­டும் கட்­ட­ணங்­களை ஒழுங்­கு­ப­டுத்­தப்­போ­வ­தாக அரசு அறி­வித்­துள்­ளது. ஆய்­வு­கூட பரி­சோ­த­னை­க­ளுக்­கான கட்­ட­ணத்­தை­யும் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­போ­வ­தாக சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்­ளார்.

சாதா­ரண மக்­க­ளுக்கு – –– நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ருக்கு மிக­வும் முக்­கி­ய­மா­ன­தொரு விட­யம் குறித்து அரசு கவ­னம் செலுத்­தத் தொடங்­கி­யுள்­ளதை இது வெளிப்­ப­டுத்­தி­ நிற்­கின்­றது.

மருத்­து­வம் என்­பது சேவை என்ற நிலை­யி­லி­ருந்து எப்­போதோ வர்த்­த­க­மா­கி­விட்­டது. இலங்­கை­யைப் பொறுத்­த­வரை அது தற்­போது பெரும் பணம் உழைக்­கும் வியா­பா­ர­மா­கி­யுள்­ளது.

மூலைக்கு மூலை மருத்­து­வ­ம­னை­க­ளும் ஆய்­வு­கூ­டங்­க­ளும் முளைப்­ப­தைப் பர­வ­லாக அவ­தா­னிக்க முடி­கின்­றது.
அரச மருத்­து­வ­ம­னை­கள் எப்­போதோ மக்­க­ளி­ட­மி­ருந்து வில­கி­விட்­டன. அதற்­கான கார­ணங்­கள் தீவி­ர­மாக ஆரா­யப்­ப­ட­வேண்­டி­யவை.

அதே­வேளை, தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் நோயா­ளி­களை மேலும் நோயா­ளி­க­ளாக்­கும் விதத்­தில் மன­உ­ளைச்­சல்­களை அளிக்­கக்­கூ­டி­ய­வை­யாக மாறி­யுள்­ளன.

சுகா­தார அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­து­போல நீதி­யற்ற விதத்­தில் கட்­ட­ணங்­கள் அற­வி­டப்­ப­டு­வது தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளில் வழ­மை­யா­கி­யுள்­ளது. அவர்­க­ளின் சேவைக்­காக அற­வி­ட­வேண்­டிய கட்­ட­ணத்தை விட பல­ம­டங்கு அதி­க­மாக அற­வி­டு­வது இயல்­பா­கக் காணப்­ப­டு­கின்­றது.

மேலும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளில் பொறுப்­புக்­கூ­றும் தன்மை என்­பது முற்­றி­லும் காணப்­ப­டு­வ­தில்லை. கட்­டண விட­யங்­க­ளி­லும் நோயா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட சிகிச்சை குறித்­தும் பதில் கூற­வேண்­டும் என்ற எண்­ணம் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு இருப்­ப­தைக் காண­மு­டி­வ­தில்லை.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் குறித்து பொது­மக்­கள் தெரி­விக்­கும் குற்­றச்­சாட்­டு­கள் மிக நீள­மா­னவை.ஆனால், இவற்றை ஒழுங்­கு­ப­டுத்­து­வது, ஒரு கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரு­வது யார் என்­பதே முக்­கி­ய­மான கேள்வி.
ஏனெ­னில், பெரு­ம­ளவு தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் பெரும் செல்­வந்­தர்­க­ளாக – அர­சி­யல் செல்­வாக்கு மிக்­க­வர்­க­ளா­கக் காணப்­ப­டு­கின்­ற­னர்.

இவர்­களை ப் பகைத்­துக்­கொண்டு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கான துணிச்­ச­லற்­ற­தாக அரசு காணப்­ப­டு­கின்­றது. இது இலங்­கை­யில் மாத்­தி­ரம் காணப்­ப­டு­கின்ற நிலை­யு­மல்ல. உலக நாடு­க­ள் பலவற்றிலும் அவ­லம் இது.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்­கான மக்­கள் சேவையை நோக்கி ஆகக் குறைந்­த­ள­வுக்கு மாற்­று­வ­தற்­கான துணிச்­ச­லற்ற அர­சி­யல்­வா­தி­கள் கார­ண­மாக மக்­கள் மேல் மேலும் பல சுமை­கள் சுமத்­தப்­ப­டு­கின்­றன.
கூட்டு அரசு கடந்த இரண்டு வரு­டத்­துக்கு மேற்­பட்ட காலப்­ப­கு­தி­யில் இது குறித்த வாக்­கு­று­தி­களை அளித்­துள்­ள­போ­தி­லும் இதனை நோக்­கிய காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை நோக்கி இன்­ன­மும் முன்­னே­ற­வில்லை.

அமைச்­ச­ரின் சமீ­பத்­திய அறி­விப்­பும் வெறும்­பேச்­சா­கவே போய்­வி­டுமா என்­பதைப் பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்­க­ வேண்­டும்.

வலம்புரி 
நோயா­ளி­களை அச்­சு­றுத்­தும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள்! Reviewed by NEWMANNAR on June 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.