அண்மைய செய்திகள்

recent
-

வடக்குத் தடகளத்தில் 80 பேருக்கு உபாதை

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் சுமார் 80 வீர,வீராங்­க­னை­கள் உபா­தைக்கு உள்­ளா­கி­னர் என்று தெரி­ய­வ­ரு­கி­றது.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யிலா தட­க­ளத் தொடர் யாழ்ப் பாணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் கடந்த வியா­ ழக்­கி­ழமை முதல் நேற்று வரை நடை ­பெற்­றது. சுமார் 80 வீர­ வீ­ராங்­க­னை­கள் உபா­தைக்கு உள்­ளா­கி­னர் என்று யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் இயன் மருத்­து­வர் ரி.சஞ்­சீ­வன் தெரி­வித்­தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கை­யில்: ‘‘வீரர்­கள் பலர் தசை­பி­டிப்பு, மயக்­கம், மூச்­சுத் திண­றல் போன்ற விபத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ள­னர்.

இதற்குக் கார­ணம் அவர்­கள் பயிற்­சி­யின் போதும் விளை­யாட்­டில் பங்கு பற்­றும் போதும் சரி­யான உஸ்­ணப்­ப­டுத்­தும் முறையைக் கடைப்பிடிக்காமை முக்­கிய கார­ண­மாக அமை­கி­றது. பயிற்­சி­யில் ஈடு ­ப­டும் போது போதிய உடற்­ப­யிற்சி செய்த பின்­னரே போட்­டி­க­ளில் பங்­கு­பற்ற வேண்­டும். அதே­போல் போட்டி நடை­பெ­று­வ­தற்கு முன்­னர் குறிப்­பிட்ட நேரத்­தில் உடற்­ப­யிற்சி செய்­தி­ருக்க வேண்­டும்.

அத்­தோடு போட்­டி­யில் பங்கு பற்­றும் வீரர்­கள் தமது போட்டி தொடர்­பாக முன்­கூட்­டியே பயிற்சி எடுப்­பது சிறந்­தது. அதா­வது நெடுந்­தூர வீரர்­கள் குறிப்­பிட்ட தூரத்தை ஓடி பயிற்சி எடுத்­தி­ருக்க வேண்­டும். இவ்­வா­றான பயிற்­சி­கள் இல்­லா­மல் கள­மி­றங்­கிய வீரர்­கள் மற்­றும் வீராங்­க­னை ­களே உபா­தைக்கு உள்­ளா­கி­யமை அதி­கம்’’ என அவர் மேலும் தெரி­வித்­தார்.

வடக்குத் தடகளத்தில் 80 பேருக்கு உபாதை Reviewed by NEWMANNAR on July 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.