வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா....
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் இன்று காலை நடைபெற்றுள்ளன.
இதேவேளை பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்துள்ளது.
இந்த பகல் நிகழ்வுகளில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இரவு வேளை கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வான வேடிக்கைகள் மற்றும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா....
Reviewed by Author
on
July 01, 2017
Rating:

No comments:
Post a Comment