அண்மைய செய்திகள்

recent
-

வடகொரியாவை சுற்றி வளைக்கும் 14,000 அமெரிக்க சிறப்புப்படை: அதிகரிக்கும் போர் பதற்றம் -


அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளை தகர்க்கும் கப்பல்கள் என பெரும்படை ஒன்று வடகொரியாவை சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் கப்பல்களில் ஒன்றான USS Ronald Reagan கொரியா தீபகற்பத்தில் வந்து சேர்ந்துள்ளது. மட்டுமின்றி USS Stethem, USS Chafee மற்றும் USS Mustin ஆகிய ஏவுகணைகளை தகர்க்கும் பெரும்படை ஒன்றும் வடகொரியாவை சுற்றி வளைத்துள்ளது. அத்துடன் 14,000 சிரப்பு ராணுவத்தினரும் போர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி அடுத்த சில நாட்களில் அமெரிக்க கடற்படையின் F/A-18 Hornets மற்றும் Super Hornets ஆகிய கப்பல்களும் போர் ஒத்திகையில் கலந்து கொள்ளும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இல்லாத வகைடில் நடக்கும் இந்த போர் ஒத்திகையால் உலக நாடுகளின் பார்வை தற்போது கொரியா தீபகற்பத்தின் மீது பதிந்துள்ளது. அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த போர் கப்பலான USS Ronald Reagan வடகொரியா கடற்பகுதியில் வந்து சேர்ந்துள்ளதை சுட்டிக்காட்டும் நிபுணர்கள், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முக்கிய முடிவுகளை மேற்கொண்டுள்ளதை இது எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

USS Ronald Reagan போர் கப்பலானது ஒரு குட்டி அமெரிக்க நகருக்கு ஒப்பானதாகும். இதில் 5,600 ராணுவத்தினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பர். மட்டுமின்றி உலகின் மிக கொடூரமானதும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை தாங்கியிருக்கும் குறித்த கப்பலானது மிக முக்கிய கட்டங்களில் மட்டுமே அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.

தற்போது தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளிடையே நடைபெறும் போர் ஒத்திகையில் குறித்த கப்பலை பயன்படுத்தியிருப்பது வடகொரியாவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும் முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 




வடகொரியாவை சுற்றி வளைக்கும் 14,000 அமெரிக்க சிறப்புப்படை: அதிகரிக்கும் போர் பதற்றம் - Reviewed by Author on December 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.