அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிக விலை உயர்ந்த அரண்மனையை சொந்தமாக்கிய சவுதி இளவரசர்: என்ன விலை தெரியுமா? -


சவுதி அரேபியாவில் ஊழல் மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் இளவரசர்களும் அரசு அதிகாரிகளும் கைதாகி வரும் நிலையில், உலகின் மிக விலை உயர்ந்த அரண்மனை ஒன்றை சவுதி பட்டத்து இளவரசர் விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் அமைந்துள்ள குறித்த அரண்மனையை 300 மில்லியன் டொலர் மதொப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு தற்போதைய சவுதி பட்டத்து இளவரசர் விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த அரண்மனையில் திரையரங்கு, மதுவகைகளை சேகரிக்கும் தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டதாக உள்ளது.
இதுநாள் வரை குறித்த அரண்மனையின் உண்மையான சொந்தக்காரர் எவர் என்பது தொடர்பாக மர்ம இருந்து வந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அரண்மனையானது விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதை விலைக்கு வாங்கிய நபர் குறித்து ரகசியம் பாதுகாக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது பிரபல நாளேடு ஒன்று மேற்கொண்ட விசாரணையில் இந்த ரகசியம் உடைக்கப்பட்டுள்ளது.
சவுதியின் பட்டத்து இளவரசே குறித்த அரண்மனையை 300 மில்லியன் டொலர் தொகைக்கு விலைக்கு வாங்கியுள்ளார். இதை சவுதி அரச குடும்பத்தினரின் ஆலோசகர் ஒருவரும் உறுதி செய்துள்ளதாகவும் அந்த செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட கலைப்படைப்பான லியோனார்டோ டா வின்சியின் Salvator Mundi என்ற ஓவியத்தை இந்த மாத துவக்கத்தில் 450 மில்லியன் டொலர் தொகைக்கு சவுதி பட்டத்து இளவரசர் விலைக்கு வாங்கியுள்ளது தெரிய வந்தது.
மட்டுமின்றி ரஷ்ய தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து 400 மில்லியன் டொலர் மதிப்பில் படகு ஒன்றையும் சவுதி பட்டத்து இளவரசர் கடந்த 2015 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார்.
சவுதியில் நிதி மோசடி மற்றும் ஊழல் தொடர்பான கைது நடவடிக்கைகளும் விசாரணைகளும் நடைபெற்று வரும் நிலையில் பட்டத்து இளவரசர் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துக்களின் பட்டியல் மலைப்பை ஏற்படுத்தியுள்ளது.




உலகின் மிக விலை உயர்ந்த அரண்மனையை சொந்தமாக்கிய சவுதி இளவரசர்: என்ன விலை தெரியுமா? - Reviewed by Author on December 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.