அண்மைய செய்திகள்

recent
-

இசைஞானி இளையராஜவுக்கு அதியுயர் விருது! -


பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முதல் நாள், பத்ம விருதுகளை இந்திய மத்திய அரசாங்கம் அறிவிப்பது வழக்கம்.
அதற்கமைய இசையமைப்பாளர் இளையராஜா உட்பட மூன்று பேருக்கு, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த, நாட்டுப்புற பாடகி, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'பத்ம' விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விருது பெற்ற கருத்து வெளியிட்ட இசைஞானி இளையராஜா, உயரிய விருது வழங்கியதன் மூலம் மத்திய அரசாங்கம் தமிழகத்தை கௌரவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இளையராஜாவை நடிகர்களான கமலஹாசன், ரஜனிகாந்த் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளார்கள்.
கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இசைஞானி இளையராஜவுக்கு அதியுயர் விருது! - Reviewed by Author on January 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.