இசைஞானி இளையராஜவுக்கு அதியுயர் விருது! -
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முதல் நாள், பத்ம விருதுகளை இந்திய மத்திய அரசாங்கம் அறிவிப்பது வழக்கம்.
அதற்கமைய இசையமைப்பாளர் இளையராஜா உட்பட மூன்று பேருக்கு, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த, நாட்டுப்புற பாடகி, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'பத்ம' விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விருது பெற்ற கருத்து வெளியிட்ட இசைஞானி இளையராஜா, உயரிய விருது வழங்கியதன் மூலம் மத்திய அரசாங்கம் தமிழகத்தை கௌரவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இளையராஜாவை நடிகர்களான கமலஹாசன், ரஜனிகாந்த் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளார்கள்.
கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர்.— Kamal Haasan (@ikamalhaasan) January 25, 2018
விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது .
இசைஞானி இளையராஜவுக்கு அதியுயர் விருது! -
Reviewed by Author
on
January 26, 2018
Rating:

No comments:
Post a Comment