அண்மைய செய்திகள்

recent
-

முதலிரவிற்கு மறுப்பு: புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு -


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் முதலிரவுக்கு மனைவி மறுத்தால் விரக்தியில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணி மற்றும் சுகன்யா ஆகிய இருவருக்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் முடிக்கப்பட்டது.
ஆனால், முதலிரவன்று மணப்பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இரண்டு நாட்கள் கடந்த நிலையில் மணியின் சடலம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்ததாகவும் தெரியவந்தது.

இதனிடையே சுகன்யாவிற்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததாலும், மணியின் மேல் இருந்த பயத்தினாலும் இவர் முதலிரவுக்கு அனுமதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மணி வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலிரவிற்கு மறுப்பு: புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு - Reviewed by Author on March 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.