வலி.வடக்கில் 33 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு -
வலி வடக்கில் பளை, வீமன்காமம் வடக்கில் உள்ள ஜே -.236 கிராம சேவகர் பிரிவில் 33 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம், யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணிகள் 27 ஆண்டுகளின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், மாவிட்டபுரம் கோவிலினை கடந்து சென்று காங்கேசன்துறை சீமெந்து தொழற்சாலையின் பிரதான வாயிலுக்கு எதிராகவுள்ளது.
விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள தமது காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
வலி.வடக்கில் 33 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு -
Reviewed by Author
on
June 05, 2018
Rating:

No comments:
Post a Comment