இலங்கையில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 35000 பேர் -
நாட்டின் பிரதான வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் 35,000இற்கும் மேற்பட்டோர் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 6234 பேரும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் 8960பேரும் , யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 4395 பேரும், கண்டி வைத்தியசாலையில் 5973 பேரும், பதுளை வைத்தியசாலையில் 872 பேரும், அனுராதபுரம் வைத்தியசாலையில் 5830 பேரும் இருப்பதுடன் அம்பாறை வைத்தியசாலையில் காத்திருப்போர் பட்டியல் கிடையாது.
2017ஆம் ஆண்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 5793 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததுடன் 68,157 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 35000 பேர் -
Reviewed by Author
on
October 13, 2018
Rating:
Reviewed by Author
on
October 13, 2018
Rating:


No comments:
Post a Comment