அண்மைய செய்திகள்

recent
-

மன்.புனித வளனார் றோ.க.த பாடசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் வழங்கி வைப்பு…தமிழமுது நண்பர்கள் வட்டம்

மன்னார் மண்ணில் உள்ள மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்காக தம்மால் இயன்றளவு உதவிகளை சேவையாக செய்து வரும் அமைப்பான மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் தங்களின் சேவையின் அடுத்த பகுதியாக இன்று 11-10-2018 வியாழக்கிழமை புனித வளனார் றோ.க.த பாடசாலைக்கு(புனித ஜோசப் மகா வித்தியாலயம்) விஜயம் மேற்கொண்டு பாடசாலை நூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகுதி நூல்கள் வழங்கி வைப்பு…
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மன்னார் பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவுடன் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினரும் இணைந்து மேற்குறித்த பாடசாலையின் அதிபர் திரு. F.ஸ்ரான்லி டிமெல் லெம்பேர்ட் அவர்களிடம் ஒரு தொகுதி நூல்கள் வழங்கிவைத்தனர்.

பாடசாலைமாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்கு பாடசாலைகளில் உள்ள நூலகங்களின் பங்களிப்பு அளப்பரியது அப்படியான நல்ல நூலகங்களை உருவாக்கி தரமான நூல்களை வழங்கி மாணவர்களின் கல்விக்கு துணையிருப்போம் நூலகம் குறைவான வளங்களோடும் வசதியற்றும் உள்ளதை காணமுடிகின்றது கவலைக்குரிய விடையமே…..

எம்மோடு சேர்ந்து பொதுக்கல்விப்பணியாற்ற நல்லுங்களை எதிர்பார்கின்றோம்….வரவேற்கின்றோம்.



மன்.புனித வளனார் றோ.க.த பாடசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் வழங்கி வைப்பு…தமிழமுது நண்பர்கள் வட்டம் Reviewed by Author on October 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.