அண்மைய செய்திகள்

recent
-

நாசா ஒரே நிமிடத்தில் மேற்கொண்ட பாரிய சாதனை -


நாசா நிறுவனமானது ஒரு நிமிடத்தில் சுமார் 450,000 கலன் நீரை வெளியேற்றக்கூடிய பொறிமுறை ஒன்றினை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

பரிசோதனையின்போது இந் நீர்த்தாரைகள் சுமார் 100 அடிகள் உயரத்திற்கு எழுந்துள்ளன.

விண்ணை நோக்கி ராக்கெட்டினை செலுத்தும் ஏவுதளங்களில் அதிகமாக வெப்பம் வெளியேற்றப்படுகின்றது.
எனவே அச் சூழலில் உண்டாகும் அதிக வெப்பத்தினை குறைக்கும் நோக்கிலேயே இப் புதிய பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒலிம்பிக் திடல் அளவிலான பாரிய நீர்தடாகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பரிசோதனை கடந்த அக்டோபர் 15ம் திகதி ஹென்னடி ஏவுளத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜுன் மாதம் மேற்கொள்ளப்படவுள்ள விண்வெளி நடவடிக்கை ஒன்றிற்காக ராக்கெட்டினை செலுத்தும்போது இப் பொறிமுறை முதன் முறையாக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாசா ஒரே நிமிடத்தில் மேற்கொண்ட பாரிய சாதனை - Reviewed by Author on October 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.