நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? வடக்கு ஆளுநர் -
நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? இதுவே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனித சமுதாயமும் தனியாகவும் குழுவாகவும் கேட்கவேண்டிய ஒரே ஒரு கேள்வி என்று வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று ஆளுநர் தலைமையில் ஆரம்பாகியது, இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? இதுவே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனித சமுதாயமும் தனியாகவும் குழுவாகவும் கேட்கவேண்டிய ஒரே ஒரு கேள்வி என்றார்.
சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பாடல் துறைத் தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இன்று ஆரம்பமானது. இதில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மதிப்புறு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். இன்று காலை 8.30 மணிக்கு பதிவுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது. காலை 9.10 மணிக்கு தமிழ்நாடு பாரம்பரிய நடனத்துடன் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரண்டாம் நாள் அமர்வு நாளை காலை ஆரம்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? வடக்கு ஆளுநர் -
Reviewed by Author
on
April 06, 2019
Rating:
Reviewed by Author
on
April 06, 2019
Rating:


No comments:
Post a Comment