அண்மைய செய்திகள்

recent
-

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நோக்கில் புதிதாக ஆணைக்குழு -


போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நோக்கில் புதிதாக ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.
மூன்றாண்டு பதவிக் கால அடிப்படையில் இந்த ஆணைக்குழுவிற்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நல்லிணக்கப் பொறிமுறைமை இணைப்புச் செயலகம் இந்த ஆணைக்குழு பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
தாரா விஜேதிலக்க, டி.எம். சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, ஏ.ஏ.எம். ஃபாதியூ மற்றும் லெப்டினன் கேணல் டபிள்யூ. டபிள்யூ ரத்னப்பிரிய ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் அமைப்புப் பேரவையின் பரிந்துரைக்கு அமைய போட்டி செயன்முறையொன்றின் ஊடாக இந்த ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அலுவலகத்தை நிறுவுவதற்கும், பணியாளர்களை நியமிப்பதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 700 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பிரதான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நட்டஈடு வழங்கும் காரியாலயம் அமைப்பதனை சர்வதேச சமூகம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த 2009ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது வரையிலான காலப் பகுதியில் இழப்புக்களை எதிர்நோக்கிய பல்லாயிரக் கணக்கான நட்டஈட்டு கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என பணிகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நோக்கில் புதிதாக ஆணைக்குழு - Reviewed by Author on April 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.