அண்மைய செய்திகள்

recent
-

புதிய பரிசு வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகம் -பிரித்தானிய இளவரசர் வில்லியம்

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகள் வழங்குபவர்களுக்கு புதிய பரிசு வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக பிரித்தானிய இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்தும் பேசிய அவர், உலக நாடுகளில் முக்கிய பிரச்சினையாக சுற்றுச்சூழல் மாசடைதல் உள்ளது. சமூகத்தில் ஒரு சிலர் புதுமையான விடயங்களை அறிந்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க அற்புதமான யோசனை கூறுபவர்களுக்கு எர்த்ஷாட் பரிசு வழங்கப்படவுள்ளது. இந்த பரிசின் நோக்கம் இயற்கையை பாதுகாப்பதும், மீட்பதும், காற்றின் தன்மையை பாதுகாப்பதும், சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்துவதும் ஆகும்.

 இத்திட்டத்தின் மூலம் 50 தீர்வுகள் மக்களிடம் பெறப்படுமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு தலா 10 இலட்சம் பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் 9 கோடியே 48 இலட்சம் பரிசு வழங்கப்படும். அடுத்த 10 ஆண்டுகள் வரை இப்பரிசினை வழங்குவதற்காக 474 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பரிசு வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகம் -பிரித்தானிய இளவரசர் வில்லியம் Reviewed by Author on October 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.