அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு- வலையிறவு பாலத்தின் கீழ் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு- வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை, கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டு.மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் காலத்தில் கைவிடப்பட்ட கைக்குண்டாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

 மேலும் குறித்த இடத்திற்கு, விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினர், சென்று சோதனைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில் கைக்குண்டினை, நீதிமன்ற அனுமதி பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு- வலையிறவு பாலத்தின் கீழ் கைக்குண்டு மீட்பு Reviewed by Author on January 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.