இந்திய மீனவர்களின் சடலங்கள் காங்கேசன்துறையில் மீட்பு
அவை நேற்று (19) நெடுந்தீவு கடலில் மூழ்கிய மீனவப் படகிலிருந்த மீனவர்களுடைய சடலமே என கடற்படையினரால் நம்பப்படுகிறது.
"நேற்று முன்தினம் ( 18) பின்னிரவில் நெடுந்தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் இவ்விபத்து இடம்பெற்றது.
இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் ஐம்பதிற்கும் அதிகமான படகுகள் வருகை தந்தன.
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் வருகை தந்த படகுகளையும், மீனவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, இலங்கை கடற்படையிடமிருந்து தப்பிக்கும் நோக்குடன், இந்திய மீனவர்கள் தமது படகுகளை செலுத்த முயற்சித்தனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் வருகை தரும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையிடமிருந்து தப்பிச் செல்வதற்காக, இலங்கை கடற்படையின் படகுகளை மோதி சேதப்படுத்துவது வழக்கமானது.
இந்திய மீனவர்களின் சடலங்கள் காங்கேசன்துறையில் மீட்பு
Reviewed by Author
on
January 21, 2021
Rating:

No comments:
Post a Comment