அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை பகுதியில் கொரோனா பரிசோதனை

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட பேசாலை பகுதி மீனவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்த நபர்களுக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் இன்று காலை 9 மணி தொடக்கம் மன்னார் பிரதேச சபை மற்றும் பேசாலை பொது வைத்தியசாலையிலும் இடம் பெற்றது

 மன்னார் மற்றும் நானாட்டான் பிரிவுகளை சேர்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகஸ்தர்கள் இணைந்து பேசாலை பகுதிகளில் மீன்பிடி தொழிளாலர்கள் மற்றும் தனிமைபடுத்தலில் இருந்த நபர்களுக்குமான பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர் 

 பேசாலையில் உள்ள பிரதேச சபை அலுவலகத்தில் 224 நபர்களுக்கும் பேசாலை வைத்திய சாலையில் 349 நபர்களுக்குமாக மொத்தம் 573 நபர்களுக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேற்படி மாதிரிகள் கொழும்பு மற்றும் முல்லேரியா வைத்திய சாலைகளுக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கபடவுள்ளன
                 











மன்னார் பேசாலை பகுதியில் கொரோனா பரிசோதனை Reviewed by Author on May 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.