மன்னாரில் உயிர் காக்கும் பணியில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயல் திட்டம் முன்னெடுப்பு.
-மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியத்தின் ஊடாக மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச சம்மேளனங்கள் ஊடாக கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்கான தலா 10 கட்டில் உருவாக்கும் பணி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில். மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பிரதேச சம்மேளனங்களிலும் 50 கட்டில்கள் உருவாக்கும் பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
-மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு குறித்த செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் உயிர் காக்கும் பணியில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயல் திட்டம் முன்னெடுப்பு.
Reviewed by Author
on
May 16, 2021
Rating:

No comments:
Post a Comment