அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு

நாட்டில் நிலவிய வானிலை மாற்றத்தினால் சில அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல – தொரவக்க பகுதியில் இன்று மாலை மண்சரிவு ஏற்பட்டது. அத்துடன், குறித்த பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தங்களினால் சுமார் 100 வீடுகள் வரை முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

 வரக்காபொல – தஸ்னாவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 54 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சியஒலாகெலே பகுதியை சேர்ந்த 53 வயதான ஒருவர் வாரியபொல – மகுருஓயாவில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். கடும் மழையை அடுத்து காலி – நாகியாதெனிய பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 31 வயதானவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். ஹற்றன் கினிகத்தேன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மூவர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு Reviewed by Author on May 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.