சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு
வரக்காபொல – தஸ்னாவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 54 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சியஒலாகெலே பகுதியை சேர்ந்த 53 வயதான ஒருவர் வாரியபொல – மகுருஓயாவில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
கடும் மழையை அடுத்து காலி – நாகியாதெனிய பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 31 வயதானவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
ஹற்றன் கினிகத்தேன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மூவர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
May 14, 2021
Rating:

No comments:
Post a Comment