அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சர்வோதய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை.

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்திட்டம் மன்னார் மாவட்ட சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் துஸ்யந்தன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (13) காலை மன்னார் பேரூந்து நிலையத்தில் இடம் பெற்றது.

 மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் , பேரூந்துகள் மற்றும் வாகனங்களில் கொரோனா தொடர்பான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் கொரோனா தொடர்பாகவும் அதில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாகவும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடை முறைகள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு கையளிக்கப்பட்டது. குறித்த செயற்திட்டம் மன்னார் மாவட்ட சர்வோதய அமைப்பினரால் தொடர்ச்சியாக பிரதேச ரீதியில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.








மன்னாரில் சர்வோதய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை. Reviewed by Author on May 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.