அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் இருந்து சென்ற கப்பலில் இருந்து இந்திய பெருங்கடலில் எண்ணெய்க் கசிவு

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் போர்த்துகீசிய கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கடலில் கலப்பதாக செய்திகள் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கொள்கலன் கப்பலான எம்.வி.டெவோனில் இருந்து 10 கி.எல் (10 kiloliter)) அளவில் எண்ணைய்க் கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தென்கிழக்கில் 450 கி.மீ தொலைவில் இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது, கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு சென்றுக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் MV Devon vesselவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பதால், கப்பல் தனது இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

 இன்று (ஜூன் 18) மாலைக்குள் ஹால்டியா துறைமுகத்திற்கு சரக்குக் கப்பல் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் கசிவு குறித்த தகவல்களை புதன்கிழமை (ஜூன் 16) பிற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையிடம் (Indian Coast Guard) கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் (Maritime rescue and Coordination Center) தெரிவித்தது. மேலதிக விசாரணையில் சுமார் 120 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட எம்.வி.டெவன் (MV Devon vessel) கப்பலின் இடது புற எரிபொருள் டாங்கில், விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது.

 இந்த விரிசலின் விளைவாக 10KL எண்ணெய் கடலில் சிந்தியது, ஆனால் மீதமுள்ள எண்ணெய் மற்றொரு டாங்கில் மாற்றப்பட்டு, அதிக கசிவு தடுக்கப்பட்டது. இந்த கப்பல் 382 கொள்கலன்களில் 10,795 டன் சரக்குகள் செல்கின்றன. ஏற்றிச் செல்கிறது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 பேர் இந்தக் கப்பலை இயக்குகின்றனர். நிர்வகிக்கப்படுகிறது. ICG தொடர்ந்து கப்பலுடன் தொடர்பில் உள்ளது மற்றும் கப்பல் சரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ICG மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உஜார்படுத்தப்பட்டு, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சென்ற கப்பலில் இருந்து இந்திய பெருங்கடலில் எண்ணெய்க் கசிவு Reviewed by Author on June 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.