பாழடைந்த கிணற்றுக்குள் சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை!
சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற குற்றவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றினை அண்மித்த பகுதியில் சில தடயங்கள் காணப்படுவதாலும் சடலம் பாயினால் சுற்றிக்காணப்படுவதாலும் குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக தெரியவருகிறது.
நாளை (16) தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மாவட்ட நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் சில நாட்களுக்கு முன்னர் போடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
பாழடைந்த கிணற்றுக்குள் சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை!
Reviewed by Author
on
August 15, 2021
Rating:

No comments:
Post a Comment