மன்னாரில் கடந்த மாதம் 643 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளின் போது நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31) மாலை மேலும் புதிதாக 32 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை 31 ஆம் திகதி வரையான ஒரு மாத காலப்பகுதியில் 643 கோவிட்-19 தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் 1667 தொற்றாளர்களும்,மாவட்டத்தில் இதுவரை 1684 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் இதுவரை 19 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் கடந்த மாதம் 643 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Reviewed by Author
on
September 01, 2021
Rating:

No comments:
Post a Comment