இலங்கையின் 74 வது சுதந்திர தினம் அனுஷ்டிப்பு குறித்து மன்னாரில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்-திணைக்கள தலைவர்கள் பங்கேற்பு.
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சிறிதளவு குறைவடைந்து இருக்கும் நிலையில் இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வை மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அன்றைய தினம் (4) காலை மன்னார் பாலத்தடியில் இருந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் பாடசாலை மாணவர்கள் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் உடன் ஆரம்பமாகி மன்னார் மாவட்ட செயலகத்தில் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
அதற்கு முன்பதாக மன்னார் பாலத்தடியில் கடற்கரை பகுதியில் பாரிய சிரமதானம் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர்கள் மன்னார் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் , பாதுகாப்புத் துறையினர் மற்றும் முப்படையினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 74 வது சுதந்திர தினம் அனுஷ்டிப்பு குறித்து மன்னாரில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்-திணைக்கள தலைவர்கள் பங்கேற்பு.
Reviewed by Author
on
January 24, 2022
Rating:

No comments:
Post a Comment