அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி பதவி விலகும் விவகாரம் - சஜித் சபாநாயகர் சபையில் கடும் வாக்குவாதம்

அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் தான் பதவி விலக தயார் என ஜனாதிபதி தெரிவித்தார் என தான் தெரிவித்ததாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளதை சபாநாயகர் நிராகரித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் தெரிவிப்பது போல கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என சபாநாயகர் மகிந்தயாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் 113 பெரும்பான்மையை நிருபித்தால் ஜனாதிபதி பதவி விலக தயார் என மாத்திரமே தான் குறிப்பிட்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

தான் தெரிவித்ததை சஜித்பிரேமதாச தவறாக புரிந்துகொண்டுள்ளார்,என சபாநாயகர் தெரிவித்துள்ளார் எனினும் தனது கருத்தில் உறுதியாக நின்ற எதிர்கட்சி தலைவர் சபாநாயகர் அவ்வாறு தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளதுடன் சபாநாயகரை பச்சை பொய்யன் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் நீரே பொய் சொல்கின்றீர் என குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி பதவி விலகும் விவகாரம் - சஜித் சபாநாயகர் சபையில் கடும் வாக்குவாதம் Reviewed by Author on April 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.