ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு: பொலிஸ் விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது; விசாரணை ஆணையத்தை நியமிக்கவும் -சஜித் பிரேமதாச
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். டீசல் மற்றும் பெற்றோல் விலை உயர்வை கண்டித்து கடந்த 15 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனையில் புகையிரத பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க தவறிய நிலையில், நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஒருவர் கொல்லப்பட்டார்,
பாதுகாப்புச் செயலாளர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர், ஐ.ஜி., மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட எஸ்.எஸ்.பி., மற்றும் எஸ்.எஸ்.பி.க்கு பின்னால் நின்ற அரசியல் சக்திகள் ஆகியோரை வரவழைக்குமாறு அவர் சபாநாயகரிடம் தெரிவித்தார்.
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு: பொலிஸ் விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது; விசாரணை ஆணையத்தை நியமிக்கவும் -சஜித் பிரேமதாச
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
Reviewed by Author
on
April 20, 2022
Rating:


No comments:
Post a Comment