புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு
குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் அதிபர் பரஞ்சோதி பாலபவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.B.R. அஸ்லம் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் பழைய மாணவர்களான புனித அன்னை திரேசா பாடசாலையின் அதிபர் செபஸ்தியன் பிள்ளை விஜயன் அவர்களும் இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியளாலருமான அமிர்தலிங்கம் சிவதீபன் அவர்களும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வின் போது புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகள் மற்றும் விருந்தினர்கள் இலங்கை வங்கி மன்னார் கிளையில் இருந்து பள்ளிமுனை பிரதான வீதி வரை பாடசாலையின் மாணவர்களால் பேன்ட் வாத்திய முளக்கத்தோடு அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்
அதனை தொடர்ந்து 2019,2020,2021 ஆண்டு காலப்பகுதியில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மற்றும் நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது
குறித்த நிகழ்வின் இறுதியில் பாடசாலை வளாகத்தில் விருந்தினர்கள் மற்று பழைய மணவர்களினால் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு
Reviewed by Author
on
April 22, 2022
Rating:

No comments:
Post a Comment