பிரதமராக ரணில் பதவியேற்றதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!
பிரதி சபாநாயகர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
மேலும், நாளை மேலும் இரண்டு நாடாளுமன்ற வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ளன.
அதன்படி, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான பிரேரணை மற்றும் ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு என்பன நடைபெறவுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்ற ஆசனங்களிலும் இன்று மாற்றம் இடம்பெறவுள்ளது. அதன்படி, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) உயர்மட்ட பிரதமர் ஆசனம் வழங்கப்படவுள்ளது.
பிரதமராக ரணில் பதவியேற்றதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!
Reviewed by Author
on
May 17, 2022
Rating:

No comments:
Post a Comment