அண்மைய செய்திகள்

recent
-

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திய ரிஷாட் பதியுதீன் எம்.பி.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையின் அரசியல் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, தமது அஞ்சலியையும் அனுதாபத்தையும் செலுத்தி வருகின்றனர். 

 இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இன்று செவ்வாய்க்கிழமை மதியம் (13) கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு தனது அஞ்சலியையும் அனுதாபத்தை செலுத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் உடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தனது அனுதாபத்தை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.






மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திய ரிஷாட் பதியுதீன் எம்.பி. Reviewed by Author on September 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.