அண்மைய செய்திகள்

recent
-

சீனாவில் தீக்கு இரையான 42 மாடி கட்டிடம்

சீனாவின் சாங்கா நகரில் 42 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 715 அடி உயரமுள்ள கட்டிடம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தின் சாங்கா நகரில் 42 மாடி கட்டிடம் உள்ளது. 715 அடி உயரமுள்ள இந்த கட்டிடம் 2000ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 

இந்த கட்டிடத்தில் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனா டெலிகாமின் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த நிலையில் 42 உயரமுள்ள கட்டி டத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (செப்.,16) மாலை 4:30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 42 மாடி முழுவதும் தீ மளமளவென பரவியது. தீயை அணைக்க, 280 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். கட்டிடம் மொத்தமும் தீக்கிரையாகியதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. ஆனால், இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் குறித்து எந்த தகலும் வெளியாகவில்லை.


சீனாவில் தீக்கு இரையான 42 மாடி கட்டிடம் Reviewed by Author on September 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.