அண்மைய செய்திகள்

recent
-

சாரதி அனுமதிப்பத்திரம் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும்

திங்கட்கிழமை முதல் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு உத்தியோகபூர்வ சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் தபால் மூலம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். 

 தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட சுமார் 600,000 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், அட்டைகள் விநியோகம் சில வாரங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் அட்டைகள் கிடைக்காததால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சாரதி அனுமதிப்பத்திரம் அட்டைக்குப் பதிலாக தற்காலிக காகித உரிம அட்டை வழங்கப்பட்டது. சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக ஏற்கனவே 500,000 அட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், இன்னும் 500,000 அட்டைகள் எதிர்காலத்தில் நாட்டிற்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார் .


சாரதி அனுமதிப்பத்திரம் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் Reviewed by Author on November 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.