போக்குவரத்துக்கு சிரமப்படும் மன்னார் மடுக்கரை கிராமத்து மக்களின் அவல நிலை.
கோடை காலத்தில் ஓரளவு நீர் வற்றிக் காணப்பட்டாலும் மழை காலங்களில் ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதால் அன்றாட கடமைகளை செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் திண்டாடி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கடும் மழை காரணமாக போக்குவரத்து பிரச்சினையால் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகிறார்கள்.
அப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதில் இருந்து உள்ளக வீதிகள் ஒழுங்காக அமைத்துக் கொடுக்கப்படாமலும் குறித்த ஆற்றினை கடந்து செல்வதற்கு பாலம் மமைத்துக் கொடுக்கப்படாததாலும் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் அன்றாடப் போக்குவரத்திற்கும் பாடசாலை செல்வதற்கும் அவசர மருத்துவ தேவைகளைப் பெறுவதற்கும் இயலாமல் தவித்து வருகிறார்கள்.
மடுக்கரை மற்றும் முள்ளிமோட்டை கிராமத்தில் உள்ளக வீதிகளை சீரமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகள் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்திய உள்ளார்கள்.
எனவே வடக்கு மாகாண ஆளுநர் எமது கிராமத்து மக்கள் மீது அக்கறை கொண்டு தற்காலிகமாக பாலம் அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்துக்கு சிரமப்படும் மன்னார் மடுக்கரை கிராமத்து மக்களின் அவல நிலை.
Reviewed by Author
on
February 13, 2023
Rating:

No comments:
Post a Comment