அண்மைய செய்திகள்

recent
-

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!

எதிர்வரும் 15ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. சம்பள முரண்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவுப் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல ஆசிரியர் சங்கங்கள் நேற்று (புதன்கிழமை) கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை சந்தித்ததன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 இந்த நிலையில், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று (வியாழக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய வகையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அத்துடன், வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களும் இன்று முதல் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன.


ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு! Reviewed by Author on March 09, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.